அஞ்சறைப்பெட்டியும் அறுசுவையும்செட்டிநாட்டின் சமையல் இந்தியா மட்டுமல்லாது உலகளவில் பரவியுள்ள இச் சுவையின் ரகசியம் யாது? நம் மனமானது சில சமயம் சீன, மேற்கத்திய உணவை நாடினாலும், செட்டிநாட்டு உணவின் மீது கொண்ட ஆர்வம் மாறாத இடம் பெற்றது. என்றும் பசுமையான இதன் சிறப்புக்குக் காரணம்: அதன் தரம் ,கையாளும் அளவு முறை,செய்முறை, பக்குவம் ,ஆர்வம், நுணுக்கம் மற்றும் அதன் மருத்துவகுணம் என்று இந்த ஏழும் நினைவில் தோன்றுகிறது. இதற்கு மிக மிக அவசியமானது சமையல் அறையில் முக்கிய இடம் வகிக்கும் அஞ்சறைப்பெட்டி. செட்டிநாட்டு சமையலில் அறுசுவையும் மேம்பட ஐந்து பொதுவான பொருட்களை பயன்படுத்தினர் .மேலும் இரண்டு கூடுதலான சுவையும்,மணமும் அதிகரிக்க பயன்படுத்தப்பட்டது. இதைப்பற்றி பல சுவையான கருத்துக்களை. ஆராய்ந்து பகிர்ந்துகொள்ள விரும்பி எழுதப்பட்டது தான் இந்த ஆச்சியின் அஞ்சறைப் பெட்டியும் அறுசுவையும் .வந்தாரைக்கையமர்த்தி ,தலைவாழை இலை போட்டு அன்போடும் பண்போடும் அறுசுவை உணவு பரிமாறி பின் செரிமானம் ( ஜீரணம் ) கருதி சூடு ஒரு ருசி சிவப்பொரு அழகு என உணர்த்த, வெற்றிலை பாக்கு இட்டு உபசரிப்பது செட்டிநாட்டின் பாரம்பரியம்.
அஞ்சறைப்பெட்டி: செய்முறை, கையாளும் அளவுமுறை, ஆர்வம், ஈடுபாடு, தரம், மருத்துவ குணம், நுணுக்கம்
அறுசுவை : இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, கசப்பு